Sunday, August 21, 2011

குணம் தரும் வாழைப்பழம்!

குணம் தரும் வாழைப்பழம்!
குணம் தரும் வாழைப்பழம்! பழ வகைகளிலேயே மிகக் குறைந்த விலையில் அதிகச் சத்துக்களுடன் கிடைக்கும் பழம், வாழைப்பழம்தான். மற்றப் பழங்களை போல குறிப்பிட்ட காலத்தில் மட்டுமில்லாமல் எல்லா காலத்திலும் இப்பழங்கள் கிடைப்பது கூடுதல் விசேஷம். இப்படி பல சிறப்புகள் பெற்ற வாழைப்பழம் பல...்வேறு மருத்துவக் குணங்களையும் தன்னகத்தே கொண்டுள்ளது. அஜீரணக் கோளாறு உள்ளவர்கள் தினமும் இரவு உணவிற்கு பின், ஒரு பழம் வீதம் சாப்பிட்டு வந்தால் நல்ல பலன் கிடைக்கும். கண்பார்வை குறைவு உள்ளவர்களுக்கு, ஒவ்வொரு உணவுவேளையின்போதும் ஒரு செவ்வாழைப்பழம் வீதம் 21 நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், கண் பார்வை சிறிது சிறிதாக தெளிவடையும். குழந்தைப்பேறு இல்லாத தம்பதியர், தொடர்ந்து செவ்வாழை பழம் சாப்பிட்டு வந்தால் உடலில் உயிர் அணுக்கள் போதுமான அளவில் பெருகி கருத்தரிக்க வாய்ப்பு ஏற்படும். ரஸ்தாளி வாழைப்பழத்தினை தண்ணீர் விட்டு கரைத்து மூன்று வேளை கொடுத்தால் வயிற்றுப்போக்கு நின்று விடும். குழந்தைகளின் வயிற்றுப் பிரச்சனைகளுக்கு நாட்டு வாழைப்பழம் மிகவும் நல்லது. உடலுக்கு குளிர்ச்சி தரும் தன்மை நாட்டு வாழைப்பழத்துக்கு உண்டு. எனவே, மஞ்சள் காமாலை போன்ற நோய்களுக்கு நாட்டு வாழைப்பழம் அருமருந்தாக திகழ்கிறது.

No comments:

Post a Comment